புதன், 30 ஜனவரி, 2013

மகிழினி மணிமாறன் – தெரியுமா?

மகிழினி மணிமாறன் – தெரியுமா?
               
                                                            கும்கி படத்தில் வரும் ‘கைளவு நெஞ்சத்தில கடலளவு ஆச மச்சான் (சொய் சொய்ங்)’ என்று மனதை கொள்ளை கொள்ளும் பாடல் இவர் பாடியது தான். அவரின் மண்வாசனை கலந்த குரலில் அந்தப் பாடலை கேட்கும் போதே மனம் சொக்கித்தான் போகிறது. இவருக்கு விகடன் விருதுகள் 2012 ‘சிறந்த பாடகி’க்கான விருது கொடுத்து கௌரவித்துள்ளது. மேலும் பல படங்களில் இவர் பாடுவார் என்று நம்புவோமாக. பாராட்டுகள் மகிழினி.

வடக்கிலிருந்து, வெளிநாட்டில் இருந்து வரும் (தமிழின் மென்னியை திருகும்) பாடகர்களை எல்லாம் கொண்டாடுகிறோம் தமிழரான இவரையும் கொஞ்சம் கொண்டாடினால் என்ன?

இதில் ஒரு வருத்தம் என்னவென்றால்,இவரின் புகைபடத்தை காண எண்ணி கூகுளில் சல்லடை போட்டு சலித்தாலும் ஒன்று கூட மாட்டது.அதற்க்கு அவர் பெயர் கூட காரணமாய் இருக்கலாம்.
தயவுசெய்து இவரின் புகைப்படத்தை உங்களுக்கு அறிமுகமான வலைதளங்களில் பதிவேற்றி ஒரு தமிழச்சியை பெருமைபடுத்துங்கள்.

இன்று ஜனவரி 30- தியாகிகள் நாள்.



                                                          இன்று   தியாகிகள் நாள் இந்திய விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை ஈந்த விடுதலைப் போராட்ட வீரத் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் மறைந்த ஜனவரி 30 ம் நாள் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
                                                             நாட்டின் விடுதலைக்காகவும், முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்ட தலைவர்களின் நினைவு தினம், தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. 

                                                     இது நாட்டுக்கு நாடு வேறுபடும். அவ்வகையில் தேசத்தந்தை மகாத்மா காந்தி, சுட்டுக்கொல்லப்பட்ட ஜன., 30ம் தேதி, இந்தியாவில் தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ஆங்கிலேயர்களிடமிருந்து நாடு சுதந்திரம் பெறுவதற்கு, பலர் தங்களது இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர். இதற்கு மதிப்பளிக்கும் விதமாகவும் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்திய சுதந்திர போராட்டத்தில், மகாத்மா காந்தியின் பங்கு மகத்தானது. தொடக்கம் முதல் கடைசி வரை "அகிம்சை' கொள்கையில் இருந்து, அவர் விலகவே இல்லை. இவரது அகிம்சை கொள்கை, இந்தியாவில் மட்டுமல்ல, உலக நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆகவே மறைந்த தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தி , அஞ்சலி செலுத்துவதோடு நின்று விடாமல், அவர்கள் பின்பற்றிய வாழ்க்கை முறையை பின்பற்ற உறுதி ஏற்போம். 
                                            ஜெய்ஹிந்த்............!

இன்றைய லொள்ளு.................!

அட.......... ஐஸ் கிரீம் போச்சே..............!

செவ்வாய், 29 ஜனவரி, 2013

அப்துல் கலாமின் 10 தன்னம்பிக்கை வரிகள்:-


1
முடியாது என்ற நோய்
" கரிகாலன் முடியாது என்று நினைத்திருந்தால் தமிழ்நாட்டில் கல்லணை கிடையாது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்க்க முடியாது என்று காந்தியடிகளும், சுதந்திர போராட்ட வீரர்களும் நினைத் திருந்தால், நமக்கு சுதந்திரம் கிடைத் திருக்காது. சி.சுப்பிரமணியமும், எம். எஸ். சுவாமிநாதனும் முடியாது என்று நினைத்திருந்தால் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து இருக்காது. வர்கீஸ் கொரியன் முடியாது என்று நினைத்திருந்தால் இந்தியா வெண்மை புரட்சியில் வெற்றி அடைந்து இருக்காது. விக்ரம் சாராபாய் முடியாது என்று நினைத்திருந்தால் இன்று செயற்கைக்கோளை இந்தியா ஏவியிருக்க முடியாது. 

முடியாது என்ற நோய் நம்மிடம் பல பேரிடம் அதிகமாக உள்ளது. முடியும் என்று நம்பும் மனிதனால்தான் வரலாறு படைக்கப்பட்டு இருக்கிறது. எனவே நண்பர்களே, முடியும் என்ற நம்பிக்கை கொண்ட 54 கோடி இளைஞர்கள்தான், இந்திய நதிகளை இணைக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்ட இளைஞர்கள்தான் அனுபவத் தின் துணை கொண்டு வெற்றியை காண வேண்டும். நதிகளை இணைக்க வேண்டும் என்றால் என்ன வேண்டும்... "முடியும்' என்ற நம்பிக்கை முதலில் ஓவ்வொரு இந்தியனுக்கும் வேண்டும் ".
 
2
மனித நாகரிகம் வளர்ந் ததற்குக் காரணமாக நான் நினைப்பதே வீரத்தினால்தான். மனிதன் எடுத்து வைத்த ஒவ்வொரு காலடிக்கும் வீரம் தேவைப்பட்டது என்பதுதான் வரலாறு. தன்னுடைய பிரதேசத்தைக் காத்துக் கொள்ள வீரம் தேவைப்பட்டது. புதிய வாசல்களைத் திறக்க, புதிய இடங் களைத் தேடிச்செல்ல வீரம் தேவைப் பட்டது. பழமையை மீறவும் புதியவற்றைக் கண்டுபிடித்து புதுமைகள் செய்யவும் வீரம் தேவைப்பட்டது. சகமனிதனின் கண்ணீரைத் துடைத்து புரட்சிகளை உருவாக்க வீரம் தேவைப்பட்டது. மனிதநேயம் என்கிற பேனாவில் வீரம் என்னும் மையினால் எழுதப்பட்டது தான் நீண்ட நெடிய மனிதனின் வரலாறு என்பது என் எண்ணம்.
3
உறுதியும், நம்பிக்கையும் தலைமைப்பண்பும் கொண்ட நம்முடைய இளம் ஆண்களும் பெண்களும் ராணுவப்படை களில் ஆர்வமுடன் சேர முன்வர வேண்டும் என்பது என் ஆசை. இன்றைய வேகமான அறிவியல் முன்னேற்றத்தின் காரணமாக ராணுவத்தின் எத்தனையோ சவாலான, சுவாரஸ்யமான வேலைகள் உருவாகி வருகின்றன. இளைஞர்களுக்கு அவை பெரும் சாகசங்களாகத் திகழும்.
4
சிந்தனை செய்.


இந்தியாவுக்கு நாம் என்ன செய்யலாம் என்று சிந்தனை செய்.
இந்தியாவை மேம்படுத்த வேண்டியவற்றைச் சிந்தனை செய்,
அமெரிக்கா, மற்ற மேலை நாடுகள் அடைந்துள்ள
மேன்மைப்பாடுகளை நாமும் பெற வேண்டுமானால்!



“புலப்படாத எதிர்காலத்துக்கு மட்டும் ஒருவர் வாழ்ந்து வருவது ஆழமற்ற மேலொட்டிய செயலாகும்.”
5
 ”என்னால் மாற்ற முடியாதவற்றை நான் ஏற்றுக் கொள்கிறேன்.   வாழ்க்கையில் உன்னை வரவேற்கும் சக்திகளும், அறவே எதிர்க்கும் சக்திகளும் இருக்கத்தான் செய்யும்.  பலனளிக்கும் ஆற்றல்கள், பயனற்ற ஆற்றல்களின் வேறுபாடுகளைத் தெளிவாகத் தெரிந்து, அவற்றுக்கு இடைப்பட்ட முறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.”


6
கனவு காண், கனவு காண், கனவு காண்,  பின்னால் கனவுகளை எண்ணங்கள் ஆக்கிப் பிறகு செய்கையாக்கு.  சிந்தனை செய்வது பேரளவில் இருக்க வேண்டும்.  நமது தேசத்தின் ஜனத்தொகை நூறு கோடி.  ஆகவே உன் சிந்தனைகள் நூறு கோடி மக்களுக்குத் தகுதி பெற்றதாய் அமைய வேண்டும்.  அப்படிச் செய்தால்தான் பேரளவில் நாம் முன்னேற முடியும்.


7
“முன்னேறிவரும் ஒரு நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினாவை எழுப்பி வருகிறார்கள்! இந்த முயற்சியில் நாங்கள் இரண்டு மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம்.  வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்கப்பல் பயணத்திற்கோ முற்படும் செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங் கனவு எங்களுக்கு அறவே இல்லை!  ஆனால் சமூக மனிதப் பிரச்சனைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொறியியல் நுணுக்கங்களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டாம் தரத்தில் இருக்க மாட்டோம்!  தேசீய ரீதியாக அர்த்தமுள்ள ஒரு பணியை மேற்கொள்கிறோம் என்னும் அழுத்தமான உறுதியுடன் இருக்கிறோம்!”


8
இமயத்தின் உச்சியை எட்டித் தொடுவதாயினும் சரி அல்லது உன் வாழ்க்கைப் பணியின் உச்சத்தை அடைவதாயினும் சரி, மேலே ஏறிச் செல்ல ஒருவருக்கு மிக்க மனவுறுதி தேவைப்படுகிறது.”
9
மாணவப் பருவத்தில் பல்வேறு தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்தத் தேர்வு முடிவுகள் எதிர்பார்த்தவாறு அமையாவிட்டால், அதற்காக மாணவர்கள் மனம் சோர்ந்துவிட வேண்டியதில்லை. தேர்வு முடிவுகள்தான் வாழ்க்கையில் இறுதியானது எனக் கருத வேண்டாம்.கடவுள் நம்முடன் இருப்பாரானால், ஒருவரும் உங்களுக்கு எதிராகச் செயல்பட முடியாது. எனவே, தொடர்ந்து முயற்சி செய்தால், நிச்சயம் வெற்றி கிட்டும். தாற்காலிகமாக ஏற்படும் பின்னடைவுக்காக மனம் சோர்ந்து போய்விட வேண்டாம்.


10
வெற்றி எப்பொழுதுமே மகிழ்ச்சியைத் தரும். ஆனால், பல காரணங்களால் சில சமயம் தேர்வில் நாம் பின்னடைவைச் சந்திக்க வேண்டியிருக்கும். இதையும் நாம் துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும்.வாழ்க்கையில் நாம் சில எதிர்பாராத பிரச்னைகளை எதிர்கொள்வதற்கு எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும் பிரச்னைகள் நம்மை மேலாதிக்கம் செய்ய அனுமதிக்கக் கூடாது.​ நாம்தான் பிரச்னைகளை மேலாதிக்கம் செய்ய வேண்டும்.​ பிரச்னைகளை தோல்வியுறச் செய்து, வெற்றி காண வேண்டும்

நீ நட்சத்திரமாக ஜொலிக்க விரும்பினால்
நீ யார் என்பது முக்கியமல்ல;
உனது மனது எதை விரும்புகிறதோ,​​
அது நிச்சயம் உன்னை வந்து சேரும்.”



எதிர்பாராத பிரச்னைகளை எதிர்கொண்டு அதில் வெற்றி பெறுவதுதான் இளைஞர்களின் தனித்தன்மையாகும்.

திங்கள், 28 ஜனவரி, 2013

முதல் கிறுக்கல்............!

                                     "அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
                                       பகவன் முதற்றே உலகு".
                                                                                        -திருவள்ளுவர்.
                         இணைய நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய வணக்கம் ......!
                                                                       இது என் முதல் வலைபதிவு என்பதால் அகரம் எழுத்துகளுக்கு முதன்மை ; ஆதிபகவன் , உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை எனக்கூறிய தெய்வபுலவர் திருவள்ளுவர் போல் இறைவனை வணங்கி இன்று முதல் எனது பதிவை தொடங்குகிறேன். இது என் முதல் பதிவு ஆகவே இந்த பதிவில் எனது எண்ணங்களை பற்றி கூறுகிறேன். நமது அன்றாட வாழ்வில் நடக்கும் இன்ப துன்பங்களை மேலும் கற்றது கல் அளவு கல்லாதது உலகளவு என்ற கூற்றுகிணங்க எனக்கு பிடித்தவை, பிடிக்காதவை, ரசித்தவைகளை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்துகொள்ள மேலும் என்னுள் எழும் சந்தேககளுக்கு உங்களின் கருத்துகளை எனதாக்கி கொள்ள எடுத்த முயற்சி தான் இந்த வலைபதிவின் நோக்கம்.  மேலும் வலைபதிவு   ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்று பல நாள் தோன்றும் ஆனால் என்ன எழுதுவது ? யார் அதை படிப்பார்கள் ?  இப்படி சிந்தித்துவிட்டு விட்டு விடுவேன். (இந்த இடுகையை இடுவதற்கு கூட பல மணி நேரங்கள் ஆனது எனக்கு மட்டும் தான் தெரியும்)
                                                      மனதில் மிகபெரிய பயம்......... பிறகு யோசித்தேன்..... என்னுடைய வாழ்வில் மாற்றம் தந்த வார்த்தைகள் அது "நம்பிக்கை இழக்கும் வரை தோல்விகள் வருவதில்லை".........
அப்புறம் என்ன தயக்கம் என ஆரம்பித்து விட்டேன் இன்று பதிவாக...........
 யார் இதை படிப்பார்கள் என்று கேட்டேன் அல்லவா....????
     அந்த ஒருவர்  நீங்கள்  தான்  ;)  மறக்காமல் வந்து போகவும் நிறைய சொல்ல காத்து  இருக்கிறேன் ;) ;) .....

அடுத்த பதிவில் சந்திப்போம் ........
                                                                                                        என்றும் அன்புடன்,
                                                                                                             -இசக்கி தாஸ்.